காவல்நிலையத்தில் பல் பிடுங்கிய விவகாரம் – உதவி காவல் கண்காணிப்பாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளர் பல்பீர் சிங் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களை கருங்கற்களால் பற்களை உடைத்தும், பிடுங்கியும், கற்களை வாயில் போட்டு ரத்தம் வரும் வரை காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் தாக்கியதாக புகார் எழுந்த நிலையில், இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இதற்கு அரசியல் தலைவர்கள் பலர் கண்டங்களை தெரிவித்ததோடு விசாரணைக் கைதிகளின் பல்லை உடைத்தும், வாயைக் கிழித்தும் கொடுமை செய்த காவல் உதவி கண்காணிப்பாளரை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், குற்றங்களில் ஈடுபடும் நபர்களின் பற்களை பிடுங்கியதாக புகார் எழுந்ததை அடுத்து நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளர் பல்பீர் சிங், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். மேலும், இவ்விவகாரத்தில் உதவி ஆட்சியர் தலைமையில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment