உலகளவில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன உற்பத்தி கடும் பாதிப்பை சந்தித்தது. தற்பொழுது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், வாகன உற்பத்தி கொடிகட்டி பறக்க தொடங்கவுள்ளது. மேலும், பல சலுகைகளையும் அளிக்க தொடங்கியுள்ளது. அந்தவகையில் டாடா நிறுவனம், 2020-ன் இறுதி தள்ளுபடியை வெளியிட்டுள்ளது. இதில் அந்நிறுவனத்தின் 3 மாடல் கார்களுக்கு அதிரடியான தள்ளுபடியை அறிவித்துள்ளது.
டாடா டியாகோ (Tata Tiago)
டாடா நிறுவனத்தின் மலிவு விலை கார்களில் இதுவும் ஒன்று. இந்த கார், தற்பொழுது பெட்ரோல் என்ஜினில் மட்டுமே கிடைக்கிறது. இந்த டியாகோ, ரூ.4.70 லட்சம் முதல் தொடங்குகிறது. இதில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இருவகையாக உள்ளது. தற்பொழுது டாடா நிறுவனம், டியாகோவை ரூ.15,000 தள்ளுபடியுடன், ரூ.10,000 பரிமாற்ற போனஸுடன் வழங்கப்பட்டு வருகிறது.
டாடா நெக்சான் (Tata Nexon):
டாடா நெக்சான், பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு வேரியண்டில் கிடைக்கிறது. இந்த இரண்டு என்ஜின்களும் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆகியவற்றைப் பெற்றுள்ளது. தற்போது ஆண்டு இறுதி தள்ளுபடியில், டாடா நெக்ஸன் ரூ.15,000 சலுகையில் வழங்கப்படுகிறது.
விலை:
பெட்ரோல்- ரூ. 6.99 லட்சம் முதல்.
டீசல்- ரூ.8.45 லட்சம் முதல்
டாடா ஹாரியர் (Tata Harrier)
டாடா நிறுவனத்தின் அதிரடி கார், டாடா ஹாரியர். இதில் 2.0 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வரும் இந்த கார், ரூ.25,000 மதிப்புள்ள நுகர்வோர் தள்ளுபடியையும், ரூ.40,000 மதிப்புள்ள ட்ரான்ஸ்பர் சலுகையையும் பெறலாம். இதன் விலை, 13.84 லட்சம் முதல் தொடங்கவுள்ளது.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…