பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை திருமணம் செய்ய போகிறாரா தமன்னா.!

நடிகை தமன்னா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான அப்துல் ரசாக் என்பவரை திருமணம் செய்ய போவதாகவும், அதற்கான நகைகளை இருவரும் சேர்ந்து வாங்கியதாகவும் கூறி வதந்திகள் கிளப்பி வருகின்றனர். 

தென்னிந்திய சினிமாயுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழ் சினிமாவில் கேடி என்னும் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதனையடுத்து பல முன்னணி ஹீரோகளுடன் நடித்துள்ளார்.தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் சிலர் பல்வேறு வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது நடிகை தமன்னா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான அப்துல் ரசாக் என்பவரை திருமணம் செய்ய போவதாகவும், அதற்கான நகைகளை இருவரும் சேர்ந்து வாங்கியதாகவும் கூறி வதந்திகள் கிளப்பி வருகின்றனர். 

சில ஆண்டுகளுக்கு முன்பு நகைக்கடை ஒன்றின் திறப்பு விழாவிற்காக தமன்னா மற்றும் அப்துல் ரசாக் கலந்து கொண்டு நகை வாங்குவதை போன்ற எடுத்து கொண்ட புகைப்படம் வெளியானது. தற்போது அந்த புகைப்படத்தை வெளியிட்டு வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

அப்துல் ரசாக் ஏற்கனவே ஆயிஷா என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வதந்தியால் அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர். இதற்கு முன்பு தமன்னா அமெரிக்க டாக்டரை திருமணம் செய்ய போவதாக கூறி, அதற்கு தமன்னா மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று.. மீனவர்களுக்கு எச்சரிக்கை.!

சென்னை: தமிழகத்தில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல்…

28 mins ago

நண்பேன்டா! சந்தானத்தை வைத்து கல்லா கட்ட ஆர்யா போட்ட பலே திட்டம்?

சென்னை : சந்தானத்தை வைத்து நடிகர் ஆர்யா இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள 'இங்க நான்தான் கிங்கு' படம்…

32 mins ago

‘இது தோனிக்கு கடைசி சீசனா இருக்கும்னு எனக்கு தோணல ..’ ! – ராபின் உத்தப்பா

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…

50 mins ago

இனி வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்.!

சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…

53 mins ago

அடுத்த 3 நேரத்தில் 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…

53 mins ago

குற்றாலத்தில் வெள்ளம்..அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய மக்கள்!!

சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில…

1 hour ago