பள்ளிக்குழந்தைகளின் உயிர் சம்பந்தப்பட்ட ஆய்வை வெறும் சம்பிரதாய விழாவாக நடத்த நினைக்கிறீர்களா? மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளிடம் காட்டம்..!

திருச்சியில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணிகளை முறையாக மேற்கொள்ளாதது ஏன் என்று? வட்டார போக்குவரத்து அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் ராசாமணி கடிந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது திருச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களை ஆய்வு செய்யும் பணிகள், வியாழக்கிழமை நடைபெற்றது. கருமண்டபம் ஆக்ஸ்போர்டு கல்லூரியில் நடந்த பள்ளி வாகனங்களுக்கான ஆய்வுப்பணிகளை ஆட்சியர் ராசாமணி நேரில் பார்வையிட்டார். அப்போது, ஆய்வு முடிக்கப்பட்ட வாகனங்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்களை சரிபார்த்த ஆட்சியர், அதில் முழுமையான விவரங்கள் குறிப்பிடப்படாததைக் கண்டு … Read more