ஐ.சி.சி மகளிர் டி20 உலகக் கோப்பை 2020 தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு உள்ளனர்.இன்று நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச முடிவு செய்தது.
முதலில் இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஷைபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா இருவரும் இறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே ஸ்மிருதி மந்தனா 10 ரன்னில் வெளியேறினார். பின்னர் ஹர்மன்பிரீத் கவுர் இறங்கினர். சிறப்பாக விளையாடிய ஷைபாலி வர்மா 29 ரன்களுடன் வெளியேற பின்னர் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 2 , ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
இதையெடுத்து இறங்கிய தீப்தி சர்மா சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்.அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 49 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 132 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணியில் ஜெஸ் ஜோனாசென் 2 விக்கெட்டை பறித்தார்.
133 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனைகளாக அலிஸா ஹீலி ,பெத் மூனி இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அலிஸா ஹீலி அதிரடியாக விளையாடி வந்தார்.ஆனால் எதிர்முனையில் இருந்த பெத் மூனி 6 ரன்னில் வெளியேறினர்.
பின்னர் இறங்கிய கேப்டன் மெக் லானிங் (5) ,ரேச்சல் ஹெய்ன்ஸ் (6) ரன்னில் விக்கெட்டை இழந்தனர். அதிரடியாக விளையாடிய அலிஸா ஹீலி அரைசதம் அடித்து 51 ரன் எடுத்தார். பிறகு மத்தியில் இறங்கிய ஆஷ்லீ கார்ட்னர் மட்டும் 34 ரன்கள் அடித்தார். மற்ற வீராங்கனைகள் அனைவரும் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியாக ஆஸ்திரேலிய அணி 19.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.இதனால் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்திய அணி சார்பில் பூனம் யாதவ் 4 ,ஷிகா பாண்டே 3 விக்கெட்டை பறித்தனர்.
சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…
சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…
சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…
சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில…
சென்னை : இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்,…
வைகாசி விசாகம் 2024 -இந்த ஆண்டிற்கான வைகாசி விசாகம் எப்போது என்றும் தேதி, நேரம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி இப்ப பதிவில் காணலாம். வைகாசி விசாகம்…