ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் மூன்றாவது போட்டியில் ஸ்காட்லாந்து அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பையின் தகுதிச்சுற்று போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. மூன்றாவது தகுதிச்சுற்று போட்டியில், டாஸ் வென்று வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீசியது.
இதன்படி முதலில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 160 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜார்ஜ் முன்சி 66 ரன்கள் குவித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜேசன் ஹோல்டர் மற்றும் அல்ஸாரி ஜோசப் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
161 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை, இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து வந்தது. ஜேசன் ஹோல்டர், இறுதி வரை அணியின் வெற்றிக்கு போராடினார். இருந்தும் அவர் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 118 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் 42 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணி வெற்றி பெற்றது. ஸ்காட்லாந்து அணியில் மார்க் வாட் 3 விக்கெட்களும், மைக்கேல் லீஸ்க், பிராட் வீல் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். ஜார்ஜ் முன்சி, ஆட்டநாயகன் விருது பெற்றார்.
சென்னை: அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு Shift Base அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ்…
சென்னை : 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு 'i am waiting' என சீமான் பதில் அளித்துள்ளார். நடிகர்…
சென்னை : வார இறுதி நாட்களில் மெட்ரோ நிர்வாகம் அசத்தலான ஆஃபரை அறிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கும், வார இறுதி நாட்களில் பயணம்…
சென்னை : தென்னாப்பிரிக்கா அணியின் அதிரடி வீரரான ஏபி டிவில்லியர்ஸ் அவரது பேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களிடையே நடந்த உரையாடலில் தோனியின் ஃபார்மை பற்றி வியந்து கூறியிருக்கிறார். ஐபிஎல்…
Ghee-நெய் சாப்பிடும் முறை மற்றும் யாரெல்லாம் எவ்வாறு சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம். நெய் நமது பாரம்பரிய மருத்துவ முறையான சித்தா ஆயுர்வேதத்தில் முக்கிய…
சென்னை: மே 22இல் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மண்டலம் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் தென் இந்திய…