ஜி20 உச்சி மாநாடு வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறுகிறது. உச்சி மாநாடு தொடங்கும் 9-ம் தேதி இரவு விருந்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அளிக்க இருக்கிறார். இதற்காக இந்திய குடியரசு தலைவரின் அதிகாரப்பூர்வ ஜி20 கூட்டத்தின் சிறப்பு விருந்து அழைப்பிதழ்கள் நேற்று காலை முதல் பல்வேறு துறையை சேர்ந்தவர்களுக்கு அனுப்பப்பட்டது. அந்த அழைப்பிதழ்களில் வழக்கத்துக்கு மாற்றாக ‘இந்திய குடியரசு தலைவர்’ என்பதற்கு பதிலாக ‘பிரசிடெண்ட் ஆஃப் பாரத்’ என்ற பெயரில் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்தியா என்ற நாட்டின் பெயரை பாரத் என மாற்ற மத்திய அரசு ஆயுதமாகி வருவதாக கூறப்படுகிறது. இதற்கான மசோதா நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் கொண்டுவரப்படும் எனவும் கூறப்படுகிறது. இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என பெயர் மாற்றம் மக்கள் மத்தியில் பெரிய அளவிலான விவாதத்தை உருவாக்கி, தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. நாட்டின் பெயர் மாற்றத்துக்கு ஒருபக்கம் பாஜகவினர் ஆதரவு தெரிவித்தாலும், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் விமர்சித்தும், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா என பெயர் சூட்டியதால் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பயந்து நாட்டின் பெயரை மாற்ற முயற்சிக்கிறது என கூறி வருகின்றனர். அந்தவகையில், நாட்டின் பெயர் மாற்றம் குறித்து நேற்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், தமிழ்நாடு” என்ற பெயரை மாற்ற முயற்சித்தவர்கள் இப்பொழுது “இந்தியா” என்ற பெயரை மாற்ற முயற்சிக்கின்றனர்.
இந்தியாவைக் கண்டு பிரிட்டீஷாருக்கு பிறகு அதிகம் பயப்படுகிறவர்களாக பாஜக வினர் மாறியுள்ளனர். பெயர் மாற்றத்திற்கு பின்னால் இருப்பது தேசப்பற்றல்ல, தேர்தல் பயம். இந்தியா வெல்லும் என கூறியிருந்தார். இதுபோன்று இன்று அவரது பதிவில், அரசியல் சாசனத்தின் முதல் வரியான “இந்தியாவின் மக்களாகிய நாங்கள்” (We, the people of India) மீதே பா.ஜ.கவின் தாக்குதல். இந்தியா என்ற பெயரை மாற்ற ஆகக் கூடிய ரூ 14000 கோடி, தமிழ்நாட்டின் 17 லட்சம் 1 -5 வகுப்பு மாணவர்களுக்கு 30 ஆண்டுகள் காலை உணவு வழங்கும் செலவுக்கு சமம் என்று தெரிவித்துள்ளார்.
ZIMvsIND : இன்று நடைபெற்ற இந்தியா-ஜிம்பாப்வே அணி இடையேயான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியா, ஜிம்பாப்வே…
மின்தடை : நாளை ( ஜூலை 8/7/2024) எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரத்தை பார்க்கலாம். வடக்கு கோவை துடியலூர், வடமதுரை, அப்பநாயக்கன்பாளையம்,…
மணத்தக்காளி கீரை -கசப்பே இல்லாமல் மணத்தக்காளி கீரை செய்வது எப்படி என இப்பதிவில் பார்க்கலாம். தேவையான பொருட்கள்; மணத்தக்காளி கீரை= இரண்டு கைப்பிடி அளவு உளுந்து= ஒரு…
ZIMvIND : தற்போது நிறைவு பெற்ற இந்திய-ஜிம்பாவே அணி இடையேயான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என முன்னிலையில்…
சென்னை: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார். கடந்த ஆட்சியில் நிறைவேற்றம் செய்யப்பட்ட…
சுனில் கவாஸ்கர் : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் சூரியகுமார் யாதவின் கேட்ச் சரி தான் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறி…