தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ படத்தில் மன அழுத்தம் காரணமாக தன்னையே மாய்த்துக் கொள்வதை போன்று சுஷாந்த் சிங்கும் செய்திருக்கலாம் என்று பிரபல எழுத்தாளர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கேப்டனாக வலம் வந்தவர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான், M.S. Dhoni: The Untold Story. இப்படத்தில், தோனி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சுஷாந்த் சிங் .
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர் மும்பை BANDRA பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இது ஒட்டுமொத்த திரையுலகையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பல பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்ததோடு பலரும் பாலிவுட் திரையுலகமே அவரின் மரணத்திற்கு காரணம் என்று குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இது குறித்து சுஷாந்த் சிங்கின் நெருக்கமானவரும் எழுத்தாளருமான சுகரித்தா செங்குப்தா கூறியதாவது ,சுஷாந்த் சிங் கடந்த சில நாட்களாக மனநிலை சரியில்லாமல் இருந்ததாகவும் ,அதானாலயே அவரது காதலியான ரேஹா விலகியதாகவும் கூறியுள்ளார்.இவர் மனசோர்வு காரணமாக டாக்டரை சந்தித்து மருந்துகள் வாங்கினாலும் அதை எடுத்து கொள்ள மாட்டார்.பலர் வற்புறுத்திய பின்னரும் அவர் கேட்கவில்லை என்று கூறியுள்ளார்.இதனால் மன அழுத்தம் அதிகரித்து தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டதாகவும் ,அவரது காதலியான ரேஹா மட்டுமே தொடர்பில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ படத்தில் பல குரல்கள் கேட்க தொடங்கியதன் காரணமாக,தன் மனைவியை தானே கொலை செய்து விடுவேனோ என்ற பயத்தில் தனுஷ் தற்கொலை செய்து கொள்வார்.அந்த படத்தில் காட்டப்பட்டதை போன்று அவருக்கும் நிறைய குரல்கள் தன்னை சுற்றி கேட்டதாகவும் ,அதனால் மன அழுத்தத்திற்கு உள்ளான சுஷாந்த் சிங் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் சுகரித்தா கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல்…
சென்னை : சந்தானத்தை வைத்து நடிகர் ஆர்யா இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள 'இங்க நான்தான் கிங்கு' படம்…
சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…
சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…
சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…
சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில…