குஷியில் மாணவர்கள்..! இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது.

இதனை அடுத்து மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு திண்டுக்கல்  மாவட்ட ஆட்சியர் பூங்கொடி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அறிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து தற்போது, கரூர் மாவட்டத்திலும் கனமழை காரணமாக கரூர் ஆட்சியர் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார்.