வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு..! ஜன்னல் கண்ணாடிகள் சேதம்..!

மேற்குவங்கத்தில் இருந்து வந்த வந்தே பாரத் ரயில் மீது கல் வீச்சு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ஹவுராவிலிருந்து புதிய ஜல்பைகுரியை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு நடத்தபட்டுள்ளது. இதில் அதிவேக ரயிலின் பெட்டியின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதாக கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஃபராக்கா அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

vande bharat express 2

ஹவுரா ரயில் நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவில் ரயிலின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்திருந்தது. இதுகுறித்து கிழக்கு ரயில்வே சிபிஆர்ஓ கவுசிக் மித்ரா கூறுகையில், “இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.

முன்னதாக ஜனவரி மாதம், டார்ஜிலிங் மாவட்டத்தின் பன்சிதேவா பகுதிக்கு அருகே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகள் மீது கற்கள் வீசப்பட்டதில்  ரயிலின் இரண்டு ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதாக ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment