StockMarkets: மூன்றாவது நாளில் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்..! 600 புள்ளிகளுக்கு மேல் உயர்வு..!

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் பிஎஸ்இ சென்செக்ஸ் 660.61 புள்ளிகள் உயர்ந்து 63,630 புள்ளிகளில் வர்த்தகம்.

இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து இந்தியப் பங்குச்சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, நேற்று 446 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகத்தை நிறைவு செய்த சென்செக்ஸ், இன்றைய வர்த்தக நாளில் 63.701 புள்ளிகளில் தொடங்கி 660.61 புள்ளிகள் என உயர்ந்து 63,630.61 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.

மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 199.65 புள்ளிகள் அல்லது 1.07% உயர்ந்து 18,890 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.. முந்தைய வர்த்தக நாளின் முடிவில் சென்செக்ஸ் 62,970 புள்ளிகளாகவும், நிஃப்டி 18,691 புள்ளிகளாகவும் நிறைவடைந்தது. இதற்கிடையில் இந்தியப் பங்குச்சந்தை குறியீடுகள் கடந்த வாரம் இதுவரை இல்ல உச்சத்தை எட்டி புதிய சாதனையை படைத்தது.

பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால் சென்செக்ஸ் குறியீட்டில் டைட்டன் கம்பெனி, பஜாஜ் ஃபைனான்ஸ், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, டாடா மோட்டார்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி, லார்சன் & டூப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன.

கோடக் மஹிந்திரா வங்கி, ஆக்சிஸ் வங்கி, சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், டெக் மஹிந்திரா, எச்சிஎல் டெக்னாலஜிஸ், விப்ரோ லிமிடெட், என்டிபிசி லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீட்டில் அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், டிவிஸ் லேப், கிராசிம் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவை அதிக லாபம் ஈட்டியவை, எச்டிஎஃப்சி லைஃப், பவர் கிரிட், ஓஎன்ஜிசி, சன் பார்மா மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவை நஷ்டமடைந்தன.