பங்குச்சந்தை உயர்வு..! சென்செக்ஸ் 59,655 புள்ளிகளாக வர்த்தகம்..!

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 22 புள்ளிகள் அதிகரித்து 59,655 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,624 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

கடந்த 3 நாட்களாக சரிவில் வர்த்தககமாகிவந்த பங்குச்சந்தை வாரத்தின் கடைசி நாளான இன்று சற்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியது. இன்றைய வர்த்தக நாளில் 59,538 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் தற்போதைய நிலவரப்படி, 22.71 புள்ளிகள் அல்லது 0.038% என அதிகரித்து 59,655 புள்ளிகளாக வர்த்தகம் ஆகிறது.

மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 0.40 புள்ளிகள் அல்லது 0.0023% சரிந்து 17,624 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 59,632 புள்ளிகளாகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,624 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.

ஐடிசி லிமிடெட், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், விப்ரோ லிமிடெட், ஏசியன் பெயிண்ட்ஸ், எச்சிஎல் டெக்னாலஜிஸ், ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. டெக் மஹிந்திரா, மாருதி சுசுகி இந்தியா, டாடா ஸ்டீல், அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.

Leave a Comment