பங்குச்சந்தை சரிவு..! சென்செக்ஸ் 61,431 புள்ளிகளாக நிறைவு..!

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 128.90 புள்ளிகள் சரிந்து 61,431 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 18,129 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இந்தியப் பங்குச்சந்தை கடந்த 3 நாட்களாக சரிவில் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, இன்றைய வர்த்தக நாளில் 61,937 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் வர்த்தக நாளின் 128.90 புள்ளிகள் அல்லது 0.21% என சரிந்து 61,431 புள்ளிகளாக வர்த்தகம் ஆகிறது.

மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 51.80 புள்ளிகள் அல்லது 0.28% சரிந்து 18,129 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 61,560 புள்ளிகளாகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,181 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.

இதற்கிடையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு சந்தையில் முதலீடு செய்து வரும் வேளையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் தங்களது அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்து லாபம் பார்த்து வருகின்றனர். கடந்த மாதங்களை விட மே மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் ரூ.18,617 கோடி முதலீடு செய்துள்ளனர்.

பஜாஜ் ஃபைனான்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி, பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. பாரத ஸ்டேட் வங்கி, ஐடிசி லிமிடெட், டைட்டன் நிறுவனம், மஹிந்திரா & மஹிந்திரா உள்ளிட்ட நிறுவங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.