பிரதமர் மோடியுடன் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே சந்திப்பு!

பிரதமர் மோடி உடன் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே சந்திப்பு.

பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், 2 நாள் அரசு முறைப்பயணமாக நேற்று இந்தியா வந்துள்ள ரணில் விக்ரமசிங்கே, குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்தித்து பேச உள்ளார்.

தற்போது, இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, இருநாட்டு நல்லுறவை வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும், இலங்கை தமிழர்கள் விவகாரம் மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.