எலக்ட்ரிக் வாகன ஓட்டிகளுக்கு சூப்பர் செய்தி.! தென்னக ரயில்வேயின் அசத்தல் நடவடிக்கை.!

தென்னக ரயில்வே மூலம், சென்னையில் ஒருசில ரயில் நிலையங்களில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் மேடை அமைக்கப்பட்டுள்ளது. 

பெட்ரோல் டீசல் வாகனங்களால் சுற்றுசூழல் மாசுபடுவதை குறைக்க மின்சார வாகனங்களின்  பயன்பாட்டிற்கு அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது. அதற்கு வரிச்சலுகைகள் எல்லாம் அளித்து வருகிறது.

தற்போது அதில் ஒரு படியாக, தென்னக ரயில்வே, மின்சார வாகனங்களை சார்ஜ் செய்ய ரயில் நிலையங்களில் அதற்கான மேடையை அமைக்க உள்ளது. அதற்கு முதற்கட்டமாக, சென்னையில் மந்தைவெளி, சைதாப்பேட்டை ரயில் நிலையங்களில் மின்சார வாகனம் சார்ஜ் செய்யும்  மேடை அமைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மற்ற ரயில் நிலையங்களிலும் இந்த ஏற்பாடு செய்யப்படும் என கூறப்படுகிறது.

Leave a Comment