INDvsSA: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு!

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட்போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று செஞ்சுரியனில் இருக்கும் சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் இந்திய கிரிக்கெட் அணி பேட்டிங் செய்யவுள்ளது. மைதானத்தில் ஈரப்பதம் இருந்த காரணத்தால் டாஸ் போட நேரம் தாமதமானது.

இந்திய அணி 

ரோஹித் சர்மா (C), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (WK), ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா

என்ஓசி வழங்க மறுப்பு..ஐபிஎல்லில் முஜீப் உர் ரஹ்மான் உட்பட 3 வீரர்கள் விளையாடுவது சந்தேகம்..!

தென்னாப்பிரிக்கா அணி 

டீன் எல்கர், ஐடன் மார்க்ரம், டோனி டி சோர்ஜி, டெம்பா பவுமா(C), கீகன் பீட்டர்சன், டேவிட் பெடிங்காம், கைல் வெர்ரேய்ன்(WK), மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, ககிசோ ரபாடா, நந்த்ரே பர்கர்

மேலும், இதற்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியும் தென்னாப்பிரிக்கா அணியும் 42 முறை நேருக்கு நேராக டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளது. இதில் 15 முறை இந்திய அணியும், 17 முறை தென்னாப்பிரிக்கா அணியும் வெற்றிபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.