இ-பாஸ் முறை எளிதாக்கப்பட்டதால் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகன எண்ணிக்கை 3 மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு முன்பு அறிவித்தது. இதனால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். உண்மையான காரணங்கள் கூறிய பின்னரும் இ-பாஸ் மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் பல எழுந்ததை அடுத்து, ஆதார் கார்டு, குடும்ப அட்டை ஆகியவற்றை காட்டி இ-பாஸ் எளிதாக வாங்கலாம் என்று முதல்வர் அறிவித்திருந்தார்.
அதன்படி, கடந்த திங்கட்கிழமை மட்டும் மட்டும் ஒரே நாளில் 1.20லட்சம் பேருக்கு இ-பாஸ் வழங்கப்பட்டதாக தமிழக அரசு அறிவித்தது. தற்போது இ-பாஸ் முறை எளிமையாக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தரும் வாகனங்களின் எண்ணிக்கை 3 மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் நெல்லையின் மாவட்ட எல்லையான கங்கை கொண்டானில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு இ-பாஸ் பெற்று தான் வாகனங்கள் வருகிறதா என்று சோதனை செய்த பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது. இபாஸ் முறை எளிதாக்கப்படுவதற்கு முன்பு ஒரு நாளில் 100 வாகனங்கள் மட்டுமே சென்று கொண்டிருந்த நிலையில் தற்போது 300 வாகனங்களாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: ஒரு புதிய ஆய்வில், X குரோமோசோம் மரபணு விந்தணுக்களின் வளர்ச்சிக்கும் ஆண்களின் கருவுறுதலுக்கும் அவசியம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட CSIR-Centre for Cellular…
சென்னை : ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு இது வரை 3 அணிகள் தேர்வாகியுள்ள நிலையில் 4-வது அணிக்காக பெங்களூரு அணியும், சென்னை அணியும் நாளைய நாளில்…
சென்னை: பாஜகவுக்கு 272 எனும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் அக்கட்சியின் பிளான் பி என்ன என்ற கேள்விக்கு அமித்ஷா பதில் அளித்துள்ளார். நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கான…
சென்னை : இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகிறது. ஐபிஎல் 2024 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17…
சென்னை: யூ-டியூபர் பெலிக்ஸிற்கு மே 31ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல் விதித்தது கோவை நீதிமன்றம். பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியாக யூ-டியூபர் சவுக்கு சங்கர்…
சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…