கதைக்கு தேவைன்னா பிகினி என்ன? ‘நிர்வாணமாக நடிப்பேன்’! ஸ்வேதா மேனன் பேச்சு!

மலையாள சினிமாவில் கவர்ச்சி நடிகையாக கலக்கி கொண்டு இருப்பவர் நடிகை ஸ்வேதா மேனன். இவர் மலையாளத்தில் 1991 இல் அறிமுகமாகி தற்போது வரை கலக்கி கொண்டு இருக்கிறார். மலையாள சினிமா மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி சினிமாவிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான ‘ரதி நிர்வேதம்’ என்ற காதல் நாடகம் மூலம் தெலுங்கிலும் பிரபலமானார்.

இது தான் அவருடைய பெயரை வெளியே கொண்டு வரவும் உதவியது என்று கூட கூறலாம். அந்த அளவிற்கு கவர்ச்சியான காட்சிகளில் ஸ்வேதா மேனன் நடித்திருந்தார்.  இவருடைய கவர்ச்சியாகவே இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமும் இருக்கிறது. ஸ்வேதா மேனனும் கதைக்கு எப்படி தேவையோ அதனை மறுப்பு தெரிவிக்காமல் நடித்து கொண்டு வருகிறார்.

லட்சத்தில் இருந்து கோடிக்கு சம்பளத்தை உயர்த்திய மணிகண்டன்?

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட போது ஸ்வேதா மேனன் தனக்கு சினிமா என்பது மிகவும் பிடித்த ஒன்று எனவும் படங்களில் கவர்ச்சியை தாண்டி கதைக்கு தேவைப்பட்டால் நிர்வாணமாக கூட நடிப்பேன் எனவும் பேசி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” நான் சினிமா துறையில் இருக்கிறேன். எனவே, என்னை பொறுத்தவரை எப்படி வேண்டுமென்றாலும் நடிக்கலாம்.

முதலில் நான் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகிறேன் என்றால் அந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பானே இல்லையா என்பதனை பார்ப்பேன். சரியாக இருப்பேன் என்று தெரிந்த பின் கிரீன் சிக்னல் கொடுப்பேன். படத்துக்குத் தேவை என்றால் பிகினியில்தான் நடிப்பேன். கதையின் தேவை ஏற்பட்டால் ஒரு படி மேலே சென்று நிர்வாணமாக நடிக்கவும் தயாராக இருக்கிறேன்” எனவும் வெளிப்படையாகவே கூறியுள்ளார் நடிகை ஸ்வேதா மேனன் .

Leave a Comment