பரபரப்பு: நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது கல்வீச்சு.. இரு தரப்பினர் இடையே மோதல்!

அருந்ததியினர் மக்களை சீமான் இழிவாக பேசியதாக கூறி ஆதித்தமிழர் பேரவையினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது கற்கள் மற்றும் பாட்டில்கள் வீசப்பட்டதால் பரபரப்பாக காணப்படுகிறது. நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அருந்ததியினர் மக்களை சீமான் தவறாக பேசியதாக, அக்கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்பாட்டத்தின்போது, நாம் தமிழர் கட்சி, ஆதித்தமிழர் பேரவையினர் மாறி மாறி தாக்கிக்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் மாறி மாறி கற்கள், பாட்டில்களை வீசி தாக்கி கொண்டதாகவும், கற்கள், பாட்டில்கள் வீசப்பட்டதை அடுத்து நாம் தமிழர் கட்சி அலுவலகத்தின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Comment