சென்னை ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து.
சென்னை ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் உள்ள பல்மருத்துவமனை கட்டிட வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த தீ விபத்தில் யாருக்கும் பாதிப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.