இளைஞர்களின் செல்பி மோகம்! ரயில் என்ஜின் மீது ஏறி நின்று செல்பி எடுத்த இளைஞர் பலி!

ரயில் எஞ்சின் மீது ஏறி நின்று செல்பி எடுத்த  பத்தாம் வகுப்பு இளைஞன் உயிரிழப்பு. 

இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரின் கைகளிலும் செல்போன்களை பார்ப்பது மிகவும் எளிதாக உள்ளது.   இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களிடையே செல்போன் மீதான மோகம் அதிகமாக உள்ளது. இந்த செல்போன் பல இளைஞர்களின் வாழ்க்கையில் பல விபரீதமான முடிவுகளை ஏற்படுத்தி விடுகிறது. அதிலும் இன்றைய இளம் தலைமுறைகள் செல்பி எடுப்பதில் தங்களது ஆர்வத்தை காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் திருநெல்வேலி ரயில் நிலையத்தில், ஒரு ரயில் நின்று கொண்டிருந்தது. அதனை பார்த்த பத்தாம் வகுப்பு மாணவன் ஞானேஸ்வரன் என்பவர் அந்த ரயில் என்ஜின் மீது நின்று செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டு உள்ளார். தனது ஆசையை நிறைவேற்றுவதற்காக, அவர் அந்த ரயில் என்ஜின் மீது ஏறி செல்பி எடுத்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த உயர் அழுத்த மின் கம்பம் உரசியதால் மாணவர் ஞானேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரயில்வே வாரியம், இந்த உயிரிழப்புகளை தவிர்ப்பதற்காக,  செல்பி எடுப்பவர்களுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: #Deathselfie

Recent Posts

மீண்டும் ரூ.55,000- ஐ நெருங்கும் தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.640 உயர்வு.!

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல்…

8 mins ago

நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை ! ஒப்பு கொண்ட மும்பை கேப்டன் !

சென்னை : நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்த பிறகு மும்பை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா தோல்வியடைந்ததற்கு இதுதான் காரணம் என கூறி பேசி இருந்தார்.…

42 mins ago

திருமணத்திற்காக ஷாப்பிங் சென்ற போது பயங்கர விபத்து.. 6 வயது சிறுவன் உள்பட 5 பலி.!

சென்னை: ஆந்திரவில் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே குத்தி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார்,…

51 mins ago

ரூ.5 லஞ்சம் வாங்கிய கம்பியூட்டர் ஆபரேட்டர்.! கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை.!

சென்னை : குஜராத்தில் 5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி  ஆபரேட்டரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. குஜராத் அகமதாபாத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் மோர்கண்டா கிராம…

59 mins ago

கெஜ்ரிவால் வீட்டில் நடந்தது என்ன.? ஆம் ஆத்மி விளக்கமும்.. ஸ்வாதி மாலிவால் பதிலும்…

சென்னை: ஸ்வாதி மாலிவால் விவகாரம் பாஜகவின் சதி என ஆம் ஆத்மி விளக்கம் அளித்துள்ளது. கடந்த மே 13ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு…

1 hour ago

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் பரப்புரை இன்றுடன் ஓய்கிறது.!

சென்னை: 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 49…

2 hours ago