#Breaking : முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உடல்நலக்குறைவால் உயிரிழப்பு.!

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உடல் நலக்குறைவால் காலமானார். மதுரை தனியார் மருத்துவமனையில் இவர் உயிரிழந்துள்ளார். 

1991 முதல் 1996 வரையில் அதிமுக ஆட்சியில் தமிழக சட்டப்பேரவை தலைவராக இருந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 76.

உடல் நலக்குறைவு காரணமாக மதுரையில் தனியார் மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களாக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி இவர் இன்று உயிரிழந்துள்ளார்.

2006இல் அதிமுகவில் இருந்து பிரிந்து திமுகவில் இணைந்தார். அதன் பின்னர் திமுக தேர்தல் பணிக்குழு தலைவராகவும் இவர் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு 2 மகன் 2 மகள் இருக்கின்றனர். இவரது மகன் மணிமாறன் திமுகவில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்.

Leave a Comment