sarathkumar [file image]
வரலட்சுமி : நடிகையும், நடிகர் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி நிக்கோலாய் சச்தேவ் என்பவரை நாளை திருமணம் செய்ய இருக்கிறார். நிக்கோலாய் சச்தேவ் மும்பையில் விலையுயர்ந்த ஓவியங்களை விற்பனை செய்யும் ஆர்ட் கேலரியை நடத்தி வரும் ஒருவர். இவர்களுடைய இரு வீட்டாரும் கலந்து பேசி இவர்களுக்கு திருமணம் நடத்தி வைக்க இருக்கிறார்கள்.
ஏற்கனவே, இந்த நல்ல விஷயத்தை ரசிகர்களுக்காக வரலட்சுமி அதிகாரப்பூர்வமாகவே அறிவித்து இருந்தார். இதனையடுத்து, திருமணம் நாளை நடைபெறுவதை ஒட்டி திருமண விழா கோலாகலமாக இரண்டு நாட்களுக்கு முன்பே தொடங்கியது. அதன்படி, கடந்த ஜூன் 30 ஆம் தேதி வரலட்சுமிக்கு மெஹந்தி விழா நடைபெற்றது.
அதற்கு அடுத்ததாக, ஜூலை 1 ஆம் தேதி, நடிகை மற்றும் அவரது குடும்பத்தினர் ஒரு சங்கீத விழாவை நடத்தினர். இதில் குடும்பமே ஒன்றாக இணைந்து நடனமும் ஆடினார்கள். இதற்கான வீடியோக்களும் கூட சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது. நாளை இவர்களுடைய திருமணம் மிகவும் பிரமாண்டமான செலவில் தாய்லாந்தில் நடைபெற இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது சொந்த மகள் வரலட்சுமி திருமணத்திற்கு சரத்குமார் 10 பைசா கூட செலவு செய்யவில்லை என நடிகர் பயில்வான் ரங்கானதான் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” சரத்குமாரின் மகள் வரலட்சுமியின் திருமணம் பிரமாண்டமாக தாய்லாந்தில் நடக்கவுள்ளது. அங்கு நடக்கவுள்ள திருமணத்திற்கு இங்கு பலரையும் அவருடைய குடும்பத்தினர் அழைத்து வருகிறார்கள்.
தன்னுடைய திருமணத்தை அனைவரும் வியந்து பார்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக வரலட்சுமி வருங்கால கணவர் திருமண ஏற்பாடுகளை பிரமாண்டமாக செய்து வருகிறார்.இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் திருமணத்தின் முக்கிய செலவுகள் அனைத்துமே அவருடைய மனமகன் ஏற்றுக் கொண்டிருக்கிறாராம். சரத்குமார் 10 பைசா கூட செலவு செய்யவில்லை எனவும் ‘பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
மின்தடை : நாளை ( ஜூலை 8/7/2024) எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரத்தை பார்க்கலாம். வடக்கு கோவை துடியலூர், வடமதுரை, அப்பநாயக்கன்பாளையம்,…
மணத்தக்காளி கீரை -கசப்பே இல்லாமல் மணத்தக்காளி கீரை செய்வது எப்படி என இப்பதிவில் பார்க்கலாம். தேவையான பொருட்கள்; மணத்தக்காளி கீரை= இரண்டு கைப்பிடி அளவு உளுந்து= ஒரு…
ZIMvIND : தற்போது நிறைவு பெற்ற இந்திய-ஜிம்பாவே அணி இடையேயான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என முன்னிலையில்…
சென்னை: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார். கடந்த ஆட்சியில் நிறைவேற்றம் செய்யப்பட்ட…
சுனில் கவாஸ்கர் : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் சூரியகுமார் யாதவின் கேட்ச் சரி தான் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறி…
புதுக்கோட்டை : மாவட்டத்தில் தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தின் (NRHM) கீழ் புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக…