ஊரக உள்ளாட்சி தேர்தல் – 9 மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவிப்பு.!

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் பொது விடுமுறை அறிவிப்பு.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, விழுப்புரம் மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் பொது விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுபோன்று 9 மாவட்டங்களை தவிர்த்து, மீதமுள்ள 28 மாவட்டங்களில் தற்செயல் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைப்பெற உள்ள பகுதிகளுக்கு மட்டும் அக்டோபர் 9ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.