ரன் மழை குவியப் போகுது…இன்று பஞ்சாப்- பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை.!!

இன்று பிற்பகல் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் – பெங்களூரு அணிகள் மோதல்

ஐபிஎல் 2023-இன் 27-வது லீக் போட்டி இன்று பஞ்சாபில் உள்ள  மொகாலியில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

 இந்த இரண்டு அணிகளும் இந்த சீசனில் தலா 5 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் பஞ்சாப் அணி 5 போட்டியில் 3 போட்டியில் வெற்றிபெற்று புள்ளி விவரப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. அதைப்போல பெங்களூர் அணி 2 போட்டியில் மட்டுமே வெற்றிபெற்று 8 -வது இடத்தில் உள்ளது.

எனவே, இன்று நடைபெறும் இந்த போட்டியில் வெற்றிபெற்று புள்ளி விவர பட்டியலில் முன்னுக்கு செல்லவேண்டும் என்ற முனைப்பில் இரண்டு அணிகளும் களமிறங்குகிறது. இரண்டு அணிகளிலும் பெரிய பெரிய ஹிட் சிக்ஸர்கள் அடிக்க கூடிய அளவிற்கு வீரர்கள் இருப்பதால், இன்றயை போட்டி பார்க்க அருமையாக இருக்கும் என கூறப்படுகிறது.

எனவே, கண்டிப்பாக சிக்ஸர்கள் வானவேடிக்கையாக இருக்கும். அதைப்போல ரன்களும் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு இந்த இரண்டு அணிகளும் நேருக்கு நேர் 30  போட்டிகளில் மோதிய நிலையில், 13 போட்டியில் பெங்களூர் அணியும், 17 முறை பஞ்சாப் அணியும் வெற்றிபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment