அடிபட்ட ரசிகைக்கு தொப்பியை பரிசாக வழங்கிய ரோஹித் சர்மா!

நேற்று முந்தினம் நடந்த போட்டியில் இந்திய அணியுடன் ,பங்களாதேஷ் அணி மோதியது. இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியிடம் பங்களாதேஷ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 92 பந்துகளில் 104 எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும்.அதில் ரோஹித் சர்மா அடித்த ஒரு சிக்ஸர் மீனா என்ற ரசிகையின் மீது பட்டது. ஆனால் அதிஷ்டவசமாக பந்து அடித்ததில் அந்த ரசிகைக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு ரோஹித் சர்மா அந்த ரசிகையிடம் நலம் விசாரித்தார். மேலும் அந்த ரசிகைக்கு ரோஹித் சர்மா  கையப்பம் மிட்ட  ஒரு தொப்பியையும் பரிசாக வழங்கினார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.