ரிஷப் பந்த், விரைவில் குணமடைய வேண்டி இந்திய அணி வாழ்த்தும் வீடீயோவை பிசிசிஐ ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.
இந்திய அணி வீரர் ரிஷப் பந்த், கடந்த வாரம் மிகப்பெரிய கார் விபத்தில் சிக்கி, பலத்த காயங்களுடன் டேராடூன் மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இந்திய அணி சார்பில் ராகுல் டிராவிட் மற்றும் வீரர்கள் விரைவில் குணமடையவேண்டுமெனெ வாழ்த்தி வருகின்றனர்.
மிகவும் கடினமான சூழ்நிலைகளில் இருந்து மீண்டுவரும் குணமும், திறமையும் உங்களிடம் உள்ளது என்பது எனக்குத் தெரியும். இது ஒரு சவாலான நேரம் நீங்கள் விரைவில் மீண்டு வருவீர்கள் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கூறினார்.
எல்லா கதவுகளையும், தடைகளையும் உடைத்துவிட்டு மீண்டும் வாருங்கள் என்று ஹர்திக் பாண்டியா கூறினார். ரிஷப் பந்த், நீங்கள் ஒரு ஃபைட்டர். விரைவில் குணமடைய வேண்டுமென இந்திய அணி வாழ்த்து தெரிவித்த வீடியோவை பிசிசிஐ ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.
???? ???? You are a fighter. Get well soon ???? #TeamIndia wish @RishabhPant17 a speedy recovery ???? ???? pic.twitter.com/oVgp7TliUY
— BCCI (@BCCI) January 3, 2023