இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் அஸ்வின் தற்போது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், நேற்றைய போட்டியின் போது அஸ்வின் ஒரு பந்துக்கு 2 முறை ரீவ்யூ அனைவரையும் அசரவைத்துள்ளார். டிஎன்பிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் திருச்சி அணிகள், கோவையில் உள்ள எஸ்என்ஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது.
இந்த போட்டியில் திருச்சி அணியின் ஆட்டத்தின் திண்டுக்கல் வீரர் அஸ்வின் 12-வது ஓவரில் பந்துவீச வந்தார். அப்போது அஸ்வின் 12.5 வது ஓவரில் அஸ்வின் வீசிய பந்தில் ராஜ்குமார் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார். நடுவரும் அவுட் என முடிவை அறிவித்தார். பிறகு ராஜ்குமார் ரீவ்யூ கேட்டார். இதனை சோதித்து பார்த்த மூன்றாம் நடுவர் நாட் அவுட் எனவும் அறிவித்தார்.
ஏனென்றால், பேட் தரையில் பட்ட போது பந்து பேட்டை கடந்து சென்றது. இதன் காரணமாக அந்த பந்து பேட்டில் படவில்லை என்று கூறி நாட் அவுட் என்று அறிவித்தார். இதனால் சற்று கடுப்பான அஸ்வின் மீண்டும் ரீவ்யூ கேட்டார். அதற்கும் நாட் அவுட் என தீர்ப்பு வந்தது.
Batsman was given out but he (Rajkumar) reviews and 3rd umpire gives him not out.
Ashwin reviews the third umpire’s decision ????
— Cricketopia (@CricketopiaCom) June 14, 2023
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதனை பார்த்த பலரும் ஏற்கனவே மூன்றாம் நடுவர் நாட் அவுட் என அறிவித்துவிட்டார் பிறகு எதற்கு அஸ்வின் ரீவ்யூ கேட்டார்..? என கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும், ஒரு பந்துக்கு 2 முறை ரீவ்யூ கேட்டது இது தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Gotta admire the third-umpire’s diligence and also, patience to go through the same protocol twice…in almost exactly the same manner. Two DRS reviews on the same ball (one by the batter—one by the bowler) for the same mode of dismissal…one keeps the review, one loses the…
— Aakash Chopra (@cricketaakash) June 14, 2023