தனக்கு தானே அபராதம் விதித்த பாமக நிறுவனர் ராமதாஸ்..!

நான் இன்று பிறமொழி கலந்து 3 முறை பேசி, தவறு |செய்துள்ளேன் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

நேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழை தேடி பரப்புரை பயணத்தை சென்னையில் இருந்து மதுரை வரை தொடங்கியுள்ளார். மருத்துவர் ராமதாஸ் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பரப்புரை பயணம் நடத்தப்பட்டது.

தமிழை தேடி விழிப்புணர்வு பயணம்

தமிழை தேடி விழிப்புணர்வு பயணம் என்ற இந்த நிகழ்வானது நேற்று தொடங்கிய நிலையில், 28ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் பேசிய சென்னையிலிருந்து மதுரை நோக்கி தமிழைத் தேடி பரப்புரை பயணம் செய்வது எனக்கே வெட்கமாக உள்ளது; முழுமையாக கூட ஆங்கிலத்தில் பேசுங்கள். ஆனால், தமிழ் பேசும்போது பிறமொழி கலந்து பேசாதீர்கள்

நான் இன்று பிறமொழி கலந்து 3 முறை பேசி, தவறு |செய்துள்ளேன். அதற்கு, எனக்கு நானே 1,000 அபராதம் விதித்து கொண்டேன் என தெரிவித்துள்ளார்.

Leave a Comment