திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை நவ.14-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.
சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கும் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை நவம்பர் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 13 ரவுடிகளை பாலிகிராம் சோதனை செய்ய அனுமதி கோரிய வழக்கில் திருச்சி நீதிமன்றத்தில் 12 பேர் ஆஜரானார்கள். பாலிகிராம் சோதனையில் என்ன கேள்வி கேட்க போகிறார்கள் என்பதை ஆவணமாக தாக்கல் செய்ய வேண்டும் என ரவுடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2012ஆம் ஆண்டு அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் திருச்சி மாவட்டம் கல்லணை அருகே கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. தமிழகத்தில் முதற்கட்டமாக 20 பேரிடம் விசாரணை நடத்தியதை தொடர்ந்து, அடுத்ததாக, மீண்டும் 11 பேரிடம் விசாரணை நடைபெறுகிறது.
இதற்காக சம்பந்தப்பட்ட 11 பேர் திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் உண்மை கண்டறியும் சோதனைக்காக சமீபத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த நிலையில், பாலிகிராம் சோதனையில் என்ன கேள்வி கேட்க போகிறார்கள் என்பதை ஆவணமாக தாக்கல் செய்ய வேண்டும் என ரவுடி தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை நவ.14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை : என்னை ஊழல்வாதி என நிரூபித்தால் தூகிலுடுங்கள் என்று ஆவேசமாக பிரதமர் மோடி அவர்கள் பேசி இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நாடெங்கும்…
சென்னை: டெல்லி மதுபான கொள்கை வழக்கிற்கான குற்றப்பத்திரிகையில் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு டெல்லியில் ஆளும் ஆம்…
சென்னை : பைக் பஞ்சர் ஆனால், அஜித் பைக்கை அந்த இடத்திலே நிறுத்திவிட்டு சென்றுவிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமார் பொதுவாகவே பைக் மீது அதிகம்…
சென்னை: மின்சாரம் தாக்கி சுயநினைவை இழந்த சிறுவனைCநொடி பொழுதில் காப்பாற்றிய பெண் மருத்துவர் வீடியோ வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலத்திலுள்ள விஜயவாடா நகரத்தில் அய்யப்பா நகரில் மின்சாரம்…
சென்னை : மழை பெய்யும் நேரத்தில் ஏசியை உபயோகப்படுத்தலாமா கூடாதா ? மழை பெய்யும் பொழுது பயன்படுத்தினால் என்ன ஆகும் என்பதை பற்றி இந்த தகவலில் நாம்…
சென்னை: சவுக்கு சங்கருக்கு மே 28வரையில் நீதிமன்ற காவல் விதித்தது திருச்சி குற்றவியல் நீதிமன்றம். பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியாக யூ-டியூபர் சவுக்கு சங்கர் மற்றும்…