இந்த 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்.!

மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களான கோயம்புத்தூர், தேனி, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரியில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.