போலீஸிற்கு போன் செய்து முதல்வருக்கு கொலை மிரட்டல்.! போதை ஆசாமியை கைது செய்த புனே காவல்துறை.!

மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபரை கைது செய்தது புனே காவல்துறை. 

மகாராஷ்டிராவில் நேற்று (திங்கள்) மாலை மும்பையை சேர்ந்த மர்ம நபர் ஒருவர் குடிபோதையில் காவல்துறை உதவி எண்ணான 112ஐ அழைத்து , தனக்கு நெஞ்சுவலி என கூறி ஆம்புலன்ஸ் கேட்டுள்ளார்.

கொலை மிரட்டல் :

அதற்கு காவல்துறையினர், ஆம்புலன்சிற்கு கால் செய்யும் படி அவரச அழைப்பு எண் 108ஐ குறிப்பிட்டுள்ளனர். இதனை அடுத்து மீண்டும் அந்த நபர் போன் செய்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

மும்பை வார்டு பாய் :

உடனே அந்த நம்பரை காவல்துறையினர் தொடர்பு கொண்டு, மர்ம நபர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துள்ளனர். அவர் வாட்கான் நிம்பல்கரில் வசிக்கும் 42 வயதான ராஜேஷ் அகவானே என்பதும், மும்பை மருத்துவமனையில் வார்டு பாயாக இருப்பவர் என்றும் கண்டுபிடித்துள்ளனர்.

போதை ஆசாமி கைது :

அவரது தொலைபேசி எண்ணை வைத்து வார்ஜே பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாக காவல்துறையால் கைது செய்யபட்டார். மேலும் இந்த விவகாரத்தில் நாங்கள் மேலும் விசாரணை நடத்தி வருகிறோம் என்று புனே காவல்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Comment