54 பயணிகளை விட்டு சென்ற தனியார் விமானம்..!

54 பயணிகளை விட்டுவிட்டு அவர்களுடைய லக்கேஜ்களுடன் புறப்பட்டு சென்ற விமானம். 

இன்று காலை 6:30 மணி அளவில் பெங்களூரு கெம்பே கவுடா விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு கோப் ஃபர்ஸ்ட் என்ற விமானம் புறப்பட்டது. இந்த விமானம் பாஸ்களுடன் காத்திருந்த 54 பயணிகளை விட்டுவிட்டு அவர்களுடைய லக்கேஜ்களுடன் புறப்பட்டு சென்றது.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனை எடுத்து விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள் தங்களது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் அலுவலகம், மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஆகியோரை டாக் செய்து புகார் தெரிவித்தனர்.  விமானம் பயணிகளை விட்டு சென்றதால், சற்று நேரம் விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

Leave a Comment