பாஜக கூட்டத்தில் சர்ச்சை பேச்சு.! முன்னாள் கர்ணல் பாண்டியன் மீது காவல்துறை வழக்குப்பதிவு.!

முன்னாள் ராணுவ வீரர்களாகிய எங்களுக்கு குண்டு வைக்க தெரியும் என சர்ச்சையாக பேசிய முன்னாள் கர்னல் பாண்டியன் மீது காவல்துறையினர் 2 வழக்குகள் பதிந்துள்ளனர். 

சில தினங்களுக்கு முன்னர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரு தரப்பினர் ஏற்பட்ட மோதலில் ராணுவ வீரர் பிரபு என்பவர் அதிக தாக்குதலுக்கு உட்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து திமுக கவுன்சிலர் சின்னசாமி அவரது மகன்கள் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

பாஜக போராட்டம் : ராணுவ வீரர் உயிரிழப்பு சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் நேற்று முன்னாள் ராணுவத்தினர் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அந்த போராட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் ராணுவ கர்னல் பாண்டியன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

குண்டு வைக்க தெரியும் : அவர் பேசுகையில், எங்களுக்கு (ராணுவத்தினர்) குண்டு வைக்கவும் தெரியும். துப்பாக்கி சுடவும் தெரியும். சண்டை போடவும் தெரியும். எதையும் செய்ய வைத்து விடாதீர்கள் என்பது போல மிரட்டும் தொனியில் குறிப்பிட்டு பேசினார். மீண்டும் பத்திரிக்கையார்களிடம் பேசுகையிலும் அதே போல தான் பேசினார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன.

2 வழக்குகள் : முன்னாள் கர்னல் பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகளும் எழுந்தன. இதனை தொடர்ந்து, தற்போது காவல் துறையினர் கர்னல் பாண்டியன் மீது 2 வழக்குக்கள் பதிவு செய்துள்ளனர். இதனால் முன்னாள் கர்னல் பாண்டியன் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் அல்லது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது .

Leave a Comment