ஊரடங்கு நீட்டிப்பு – இன்று மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை.!

மாதம் இறுதியில் மன் கீ பாத் நிகழ்ச்சியில் தொடர்ந்து உரையாற்றி வரும் பிரதமர் மோடி, இன்றும் மன் கீ பாத் நிகழ்ச்சியில் காணொளி மூலம் உரையாற்றவுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தீவிரம் காரணமாக கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு 4 கட்டங்களாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த 4 ஆம் கட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டது. இன்றுடன் நிறைவடைய இருந்த ஊரடங்கை ஜூன் 30 ஆம் தேதி வரை அதாவது 5 ம் கட்ட ஊரடங்கு நேற்று மத்திய அரசு அறிவித்தது. அதில், ஜூன் 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை படிப்படியாக தளர்வுகளுக்கான அறிபவிப்புகள் Unlock 1.0 என்று அடிப்படையில் வெளியிடப்பட்டது. 

இந்த 5 ஆம் கட்ட ஊரடங்கில் நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொதுமுடக்கம் நீடிக்கப்படுகிறது என்றும் மற்ற பகுதிகளில் தளர்வுகளுடன் ஜூன் 30 வரை பொதுமுடக்கம் அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரவு 9 மணி முதல் காலை 5 மணிவரை பொதுமக்கள் வெளியில் நடமாட தடை என்றும் இரவு 9 மணியில் இருந்து காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

முதல் கட்ட தளர்வில், ஜூன் 8 ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள், விடுதிகள், உணவகங்கள், ஷாப்பிங் மால் ஆகியவை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட தளர்வுகளில் பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட முடிவு எடுக்கப்படும். இதனை பெற்றோர்களுடன் மாநில அரசு ஆலோசனை நடத்தி கல்வி நிறுவுனங்களை திறப்பது குறித்து முடிவெடுக்கலாம் என்று கூறியுள்ளது. மூன்றாம் கட்ட தளர்வுகளில், மெட்ரோ ரயில், சினிமா ஹால், நீச்சல் குளம், ஜிம் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட முடிவு எடுக்கப்படும். 

இந்த நிலையில், மாதம் இறுதியில் மன் கீ பாத் நிகழ்ச்சியில் தொடர்ந்து உரையாற்றி வரும் பிரதமர் மோடி, இன்றும் மன் கீ பாத் நிகழ்ச்சியில் காணொளி மூலம் உரையாற்றவுள்ளார். இதில், இந்த 5 ஆம் கட்ட ஊரடங்கை குறித்து ஏதேனும் முக்கிய அறிவிப்பிகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Recent Posts

‘இது தோனிக்கு கடைசி சீசனா இருக்கும்னு எனக்கு தோணல ..’ ! – ராபின் உத்தப்பா

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…

10 mins ago

இனி வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்.!

சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…

13 mins ago

அடுத்த 3 நேரத்தில் 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…

13 mins ago

குற்றாலத்தில் வெள்ளம்..அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய மக்கள்!!

சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில…

41 mins ago

இந்த 11 மாவட்டத்துக்கு கனமழை…3 மாவட்டத்துக்கு மிக கனமழை..வானிலை மையம் அலர்ட்!

சென்னை : இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்,…

1 hour ago

வைகாசி விசாகம் 2024 இல் எப்போது?

வைகாசி விசாகம் 2024 -இந்த ஆண்டிற்கான வைகாசி விசாகம் எப்போது என்றும்  தேதி, நேரம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி இப்ப பதிவில் காணலாம். வைகாசி விசாகம்…

1 hour ago