தென் அமெரிக்க நாடான பெருவில் பேருந்து கவிழ்ந்து விபத்து! விபத்தில் 46 பேர் பலி…

 பெருவில் 57 பயணிகலுடன்  சென்ற பேருந்து  பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 48 பேர் பலியாகினர்.
தென் அமெரிக்க நாடான பெருவில் மலைபகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து திடிரென்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதனால் பேருந்தில் பயணித்த 57பேரில் 48 பேர் பலி என போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது .
இதுகுறித்து பெரு போலீஸ் தரப்பில், “பெருவில் 57 பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று பெரிய பள்ளத்தில் சரிந்து விழுந்ததில் அதில் பயணம் செய்த 48 பேர் பலியாகினர். பலியானவர்களின் உடல்களை மீட்க ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து பெரு அதிபர் பெட்ரோ பாப்லோ வெளியிட்ட அறிக்கையில்,
“இந்த விபத்து பெரும் வருத்தத்தை அளித்துள்ளது” என்று கூறியுள்ளார்.
தென் அமெரிக்க நாடான பெருவில் பயணிகள் சென்ற பேருந்து  பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 48 பேர் பலியாகினர்.விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. போலீஸார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
பெருவில் கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் சாலை விபத்துகளில் 2,000க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
source: dinasuvadu.com

Leave a Comment