இந்தியா

இத்தன நாளா இது தெரியாம போச்சே ..!! இந்த திட்டங்களை பத்தி தெரிஞ்சிக்கோங்க மக்களே…!

தபால் அலுவலக திட்டங்கள்: தபால் அலுவலக திட்டங்கள் மூலம் நீங்கள் பணத்தை டெபாசிட் செய்தால், வட்டியின் மூலம் உங்களுக்கு பணம் கிடைக்கும். அது என்னென்ன திட்டங்கள் என்று பார்ப்போம்.

நாம் ஒரு பெரிய தொகையை கையில் வைத்து அதை வங்கியிலோ, அல்லது வீட்டிலோ வைத்திருப்பதற்கு பதிலாக இது போன்ற அரசாங்கத்தை மையமாக கொண்டு இயங்கும் அலுவலகங்களில் அதனை போட்டு வைத்தால் அதன் மூலம் நமக்கு ஒரு வட்டி விகிதம் படி மாதம் தோறும் நமக்கு அது வருமானத்தையும் பெற்று தரும்.

நம்மில் சிலருக்கு இந்த திட்டங்களை பற்றி தெரிந்திருக்கலாம், அல்லது தெரியாமலும் இருக்கலாம், இருப்பினும் இதை நமக்கு லாபம் ஈட்டி தரும் திட்டங்களை பற்றியும் அவற்றின் வட்டியின் விகிதத்தை பற்றியும் தெளிவாக பார்க்கலாம்.

தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS)

இந்த திட்டம் என்பது நிதி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்ட முதலீட்டுத் திட்டமாகும். இதில் முன்பு 6.6 % வட்டி விகிதத்துடன் இருந்த நிலையில் தற்போது இந்த திட்டத்தின்  உங்களுக்கு 7.4 % சதவீத வட்டி வழங்கப்படுகிறது. மேலும், அந்த வட்டியானது மாதம் மாதம் நமக்கு கிடைத்து விடும்.

ஒரு பெரிய தொகையை இதில் முதலீடு செய்யும் பட்சத்தில் அதற்கான வட்டி விகிதம் மாதம்தோறும் பெரிய பணத்தொகையாகவே  நமக்கு கிடைத்துவிடும்.

தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் (NSC)

NSC எனப் பிரபலமாக எல்லாருக்கும் தெறித்த இந்த திட்டம் 5 ஆண்டு கால வைப்புத் திட்டமாகும். இந்த திட்டத்தில், உங்களுக்கு 7.7 % சதவீத வட்டி வழங்கப்படுகிறது. மேலும், ஒரு மொத்த பெரிய தொகையை இதில் டெபாசிட் செய்வதன் மூலம், 5 ஆண்டுகளில் அதன் மூலம் நல்ல பணம் நாம் சம்பாதிக்கலாம்.

இந்த திட்டம் கூட்டு வட்டி என்ற அடிப்படையில் செயல்படுகிறது. இதில் நாம் சம்பாதித்த வட்டி ஆண்டு தோறும் மறு முதலீடு செய்யப்பட்டு, முதிர்வு காலத்தில் ஒட்டுமொத்த தொகையாக வழங்கப்படும்.

PPF திட்டம்

நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய விரும்புவர்களுக்கு இந்த PPF திட்டம் என்பது ஒரு சிறந்த திட்டமாகும். இந்த திட்டத்தில், நீங்கள் மூன்று வழிகளில் வரிச் சலுகைகளையும் பெறுவீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இதில் 7.1 % சதவீத வட்டி வழங்கப்படுகிறது.

இந்த முதலீட்டை மொத்தமாகவும் அல்லது தவணை அடிப்படையில் கொடுக்கலாம். குறிப்பாக, ஒரு தனிநபர் ஒரு PPF கணக்கில் 12 வருட தவணை செலுத்துவதற்கு மட்டுமே தகுதியுடையவர் ஆவார்.

மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ்  திட்டம்

இந்தத் திட்டம் என்பது பெண்களுக்காக மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில், 2 ஆண்டுகளுக்கு பணம் டெபாசிட் செய்யலாம். மேலும், தற்போது இத்திட்டத்திற்கு 7.5% சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

இதை அரசாங்கத்தின் சிறு சேமிப்புத் திட்டம் என்றும் கூறலாம். சிறுக சிறுக சேமிக்கும் பெண்களுக்கு இந்த திட்டம் உபயோகமாக இருக்கும் என்றும் மேலும் இது இந்தியப் பெண்களிடையே சேமிப்புப் பழக்கத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு வந்த திட்டமாகும்.  இந்த திட்டத்திற்கு எந்த ஒரு வயது வரம்பும் கிடையாது.

Recent Posts

‘வெற்றியை கொண்டாட எங்களுடன் சேருங்கள்’- ஜெய்ஷா டிவீட் ..!

பிசிசிஐ : இந்த ஆண்டில் நடைபெற்று வந்த மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிறைந்த தொடர் தான் 20 ஓவர் உலகக்கோப்பை தொடராகும். இந்த தொடரில் இந்திய அணி மிக பிரமாதமாக…

2 hours ago

கங்கானாவை அறைந்த பெண் காவலருக்கு பெங்களூருக்கு பணிமாற்றமா.? CISF புது விளக்கம்.!

பாஜக எம்.பியும், நடிகையுமான கங்கனா ரனாவத்தை தாக்கிய விவகாரத்தில், இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த மத்திய தொழிற் பாதுகாப்பு படை (CISF) பெண் காவலர் குல்விந்தர் கவுர், மீண்டும் பணியில்…

3 hours ago

கதை கேட்ட சிவகார்த்திகேயனுக்கு முக்கிய கண்டிஷன் போட்ட எச்.வினோத்?

சிவகார்த்திகேயன் : இயக்குனர் எச்.வினோத் அடுத்ததாக விஜயின் 69-வது திரைப்படத்தினை இயக்கவுள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது. தகவல்களாக வெளியாகி இருக்கிறது என்பதை தவிர அதிகாரப்பூர்வமாக எந்த…

3 hours ago

மீண்டும் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.? ஏற்பாடுகள் தீவிரம்…

ஜார்கண்ட்: அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் போதிய ஆதாரமில்லை என ஜாமினில் வெளியில் வந்த ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்கண்ட் மாநில முதல்வராக பொறுப்பேற்க உள்ளார் என…

3 hours ago

நாகப்பாம்பு வாயில் சிக்கிய மருந்து பாட்டில்! வைரல் வீடியோ…

ஒடிசா: புவனேஸ்வரில் தனது இரை என நினைத்து இருமல் மருந்து பாட்டிலை நாகப்பாம்பு உட்கொண்ட போது அதன் வாயில் சிக்கிக் கொண்டது. பின்னர், வலியால் துடித்த நாகப்பாம்புவின்…

3 hours ago

சிறுவனை தாக்கிய தெருநாய்கள் ..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சி!!

தெலுங்கானா : சமீபத்தில் அதிகமாக தெருநாய்கள் தாக்கிய செய்திகள் கேட்பதோடு வீடியோ கட்சிகளும் வெளியாகி நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது. அதே போல ஒரு சம்பவம் தற்போது ஹைதராபாத்தில்…

3 hours ago