அக்.4-ஆம் தேதி முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிப்பு…!

2020 – 2021 கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் திங்கள் (அக்.4) முதல் அசல் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து. 2020 – 2021 கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் திங்கள் (அக்.4) முதல் அசல் சான்றிதலழ்களை பெற்றுக்கொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி, அக்.4-ஆம் தேதி முதல், அதாவது வரும் திங்கள் முதல், மாணவர்கள் தங்களுடைய பள்ளிகளுக்கு நேரடியாக சென்று, பள்ளி தலைமையாசிரியரிடம் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.