ஒரே ஒரு வெற்றி.! ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசு.! கால்பந்தாட்ட வீரர்களை அதிர வைத்த சவுதி அரேபிய அரசு

அர்ஜென்டினாவை வென்ற சவுதி அரேபிய கால்பந்து வீரர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கும் இளவரசர். 

கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பையில் பலம் வாய்ந்த அர்ஜென்டினா மற்றும் சவுதி அரேபியா அணிகளுக்கிடையேயான போட்டியில் யாரும் எதிர்பாராத விதமாக இரண்டு முறை உலகக்கோப்பை சாம்பியனான அர்ஜென்டினாவை 2-1 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா வென்று அசத்தியது. இந்த வெற்றியைகொண்டாடும் விதமாக சவுதிஅரேபிய அரசு நவ-23 அன்று தேசிய விடுமுறையாக அறிவித்தது.

தற்போது இந்த வெற்றி கொண்டாட்டத்தை மேலும் உற்சாகப்படுத்த சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத், சவுதிஅரேபிய கால்பந்து வீரர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம்(Phantom) காரை பரிசாக அறிவித்துள்ளார். உலகக்கோப்பை முடிந்து நாடு திரும்பும் போது அவர்கள் இந்த காரைப் பெற்றுக் கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.

Leave a Comment