மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை குடும்பத்தினர் மட்டும் சந்திக்க அனுமதி.!

மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை குடும்பத்தினர் மட்டும் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் புழல் சிரைத்துறையினர் கட்டுப்பாட்டில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அவருக்கு தீவிர இதய சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அமைச்சரின் குடும்பத்தார் மட்டும் நேரில் சென்று பார்க்க அனுமதி வழங்ப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குடும்பத்தார் புழல் சிறை நிர்வாகத்திடம் அனுமதி பெற்று பின்னர் அமைச்சரை சந்திக்க அனுமதி கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.