கடுமையான வெப்பம்..! மேற்கு வங்க மாநில பள்ளி, கல்லூரிகளுக்கு ஒருவாரம் விடுமுறை..!

மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஒருவாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடுமையான வெப்பம் நிலவி வருவதால் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் திங்கள் முதல் ஞாயிற்றுகிழமை வரை ஒருவாரம் விடுமுறை அளித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

மேலும், மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை மாணவர்கள் யாரும் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாகவே மேற்கு வங்க அரசு வெயிலின் காரணமாக மலைப்பகுதிகள் தவிர, அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் கோடை விடுமுறையை மே 2-ம் தேதி வரை மூன்று வாரங்களுக்கு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து, மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது, மேலும் வெப்ப அலை நிலை ஏப்ரல் 19 வரை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

leave

Leave a Comment