விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட  முதியவர் உயிரிழந்த வழக்கு.. மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

முதியவர் உயிரிழந்த வழக்கில் தமிழக தலைமை வனக்காவலர் 4 வாரத்திற்குள் உரிய பதிலளிக்கக்கோரி மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தென்காசி மாவட்டம், வாகைக்குளத்தை சேர்ந்தவர், அணைக்கரை முத்து. 74 வயதாகும் இவர், விவசாயம் பார்த்து வருகிறார். அவரின் வயலில் கடந்த சில தினங்களாகள் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வந்த நிலையில், அரசின் விதிகளை மீறி, தனது விளைநிலங்களை சுற்றி மின் வேலிகளை அமைத்தார்.

இதுகுறித்து கடையம் பகுதி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, விவசாயி முத்துவை கடயம் அலுவலகத்தில் ஆஜராகுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, அவரும் நேற்று முன்தினம் மாலை ஆஜராகி, மின்வேலி அமைத்ததை ஒப்புக்கொண்டு, அதற்கான அபராதத்தை காட்டுவதாக தெரிவித்தார்.

அப்பொழுது அவர்க்கு நெஞ்சு வலி ஏற்பட்ட காரணத்தினால், அவரை கடையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் வனத்துறை போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார் என உறவினர்கள் குற்றம் சாற்றினார்கள்.

இந்த சம்பவம் குறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், முதியவர் உயிரிழந்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம், தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு குறித்து தமிழக அரசு தலைமை வனக்காவலர் 4 வாரத்திற்குள் உரிய பதிலளிக்கக்கோரி மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Recent Posts

அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் பணி – அரசாணை வெளியீடு!

சென்னை: அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு Shift Base அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ்…

41 mins ago

ஐ யம் வெயிட்டிங்.. விஜயுடன் கூட்டணியா.? சீமான் கலக்கல் பதில்.!

சென்னை : 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு 'i am waiting'  என சீமான் பதில் அளித்துள்ளார். நடிகர்…

48 mins ago

100 ரூபாய்க்கு அளவற்ற பயணம்! மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்!

சென்னை : வார இறுதி நாட்களில் மெட்ரோ நிர்வாகம் அசத்தலான ஆஃபரை அறிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கும், வார இறுதி நாட்களில் பயணம்…

1 hour ago

கடைசி 5 ஓவர் வந்தால் போதும் 50 ரன் அடிப்பாரு’ ! தோனியின் ஃபார்ம்மை வியந்து பாராட்டிய டிவில்லியர்ஸ் !!

சென்னை : தென்னாப்பிரிக்கா அணியின் அதிரடி வீரரான ஏபி டிவில்லியர்ஸ் அவரது பேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களிடையே நடந்த உரையாடலில் தோனியின் ஃபார்மை பற்றி வியந்து கூறியிருக்கிறார். ஐபிஎல்…

2 hours ago

நெய்யை யாரெல்லாம் எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரிஞ்சுக்கோங்க.!

Ghee-நெய் சாப்பிடும் முறை மற்றும் யாரெல்லாம் எவ்வாறு சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம். நெய் நமது பாரம்பரிய மருத்துவ முறையான சித்தா ஆயுர்வேதத்தில் முக்கிய…

2 hours ago

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை… தமிழக கனமழை நிலவரம்…

சென்னை: மே 22இல் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மண்டலம் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் தென் இந்திய…

2 hours ago