இனி இபிஎஸ்-க்கு எந்த தடையும் இல்லை.. அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.!

இனி எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளர் ஆவதற்கு எந்த தடையும் இல்லை. – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். 

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மற்றும் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனுக்கள் இன்று சென்னை உய்ரநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் இபிஎஸ் ஆதரவாளர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர் .

நல்ல தீர்ப்பு :

இந்த தீர்ப்பு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி பெரும் வகையில் தீர்ப்பு வெளியாகியுளளது. அதிமுக சட்டத்திட்ட விதிகளிடன் படி சென்ற காரணத்தால் எங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது. என்று குறிப்பிட்டார்.

எந்த தடையும் இல்லை :

மேலும், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், ஓபிஎஸ் நீக்கம் செல்லும் என்றும் தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளர் ஆவதற்கு எந்த தடையும் இல்லை எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறினார்.

Leave a Comment