வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் – டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை

கோவையில் வட மாநில தொழிலாளர் விவகாரம் தொடர்பாக தொழில்துறையுடன் டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, வடமாநில தொழிலாளர் குறித்து வதந்தியான செய்திகள் பரவிய  நிலையில்,இந்த விவகாரம் தற்போது பேசும் பொருளாகி உள்ளது. மேலும் வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தியான செய்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதஹு.

இந்த நிலையில், தமிழக அரசு புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதோடு, வடமாநில தொழிலாளர்களுக்கு புகார் தெரிவிப்பதற்காக உதவி எண்ணையும் அறிவித்துள்ளது.

டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை

இந்த நிலையில், கோவையில் வட மாநில தொழிலாளர் விவகாரம் தொடர்பாக தொழில்துறையுடன் டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை ஈடுபட்டுள்ளார். ஆலோசனை கூட்டத்தில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை காவல் ஆணையர், 8 மாவட்ட எஸ்பிக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Leave a Comment