நாளை மறுநாள் விலகுகிறது வடகிழக்கு பருவமழை – வானிலை மையம்

நாளை மறுநாள் வடகிழக்கு பருவமழை விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன என வானிலை மையம் தகவல்.

வரும் 12-ஆம் தேதி அன்று வடகிழக்கு பருவமழை விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. 14-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்றும் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளைகளில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment