பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள சக்ரா தொகுதியில், கடந்த 27 நாட்களில் 36 பேர் இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளால் இறந்துள்ளனர்.
பீகாரில் கொரோனா சோதனை கருவிகள் பற்றாக்குறை, திருட்டுத்தனமாக சந்தையில் விற்கப்படும் மருந்து உபகாரணங்கள் காரணமாக, ஒரு சில கிராமங்களில், கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை தீவிரமாக தாக்குதலை நடத்தி வருகிறது.
அந்த வகையில், பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள சக்ரா தொகுதியில், கடந்த 27 நாட்களில் 36 பேர் இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளால் இறந்துள்ளனர். இவர்கள், கோவிட் -19 நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக கிராமவாசிகள் கூறினாலும், உள்ளூர் நிர்வாகம் அவர்களின் கூற்றுக்களை மறுத்துள்ளது. இதனால் பீதியடைந்த கிராம வாசிகள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
சக்ரா பிளாக்கின் சர்பஞ்ச் பிரமோத் குமார் குப்தா கூறுகையில், சில முதியவர்கள் இறந்துவிட்ட நிலையில், மீதமுள்ளவர்கள் இருமல், சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மரணங்கள் திடீரென அதிகரித்தது குறித்து அவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்ததாகவும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இருமல் மற்றும் சளி காரணமாக கடந்த 27 நாட்களில் 36 இறப்புகள் பதிவாகியுள்ளதாக மருத்துவ அதிகாரியிடம் தெரிவித்தேன். ஆனால் கிட்கள் எதுவும் இல்லை. நான் மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் கிட்களைக் கேட்டு, சோதனைக்கான கருவிகள் இப்போது கிடைத்துள்ளது. சோதனை செய்யப்படுகிறது என குப்தா தெரிவித்துள்ளார்.
சென்னை: ஒரு புதிய ஆய்வில், X குரோமோசோம் மரபணு விந்தணுக்களின் வளர்ச்சிக்கும் ஆண்களின் கருவுறுதலுக்கும் அவசியம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட CSIR-Centre for Cellular…
சென்னை : ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு இது வரை 3 அணிகள் தேர்வாகியுள்ள நிலையில் 4-வது அணிக்காக பெங்களூரு அணியும், சென்னை அணியும் நாளைய நாளில்…
சென்னை: பாஜகவுக்கு 272 எனும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் அக்கட்சியின் பிளான் பி என்ன என்ற கேள்விக்கு அமித்ஷா பதில் அளித்துள்ளார். நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கான…
சென்னை : இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகிறது. ஐபிஎல் 2024 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17…
சென்னை: யூ-டியூபர் பெலிக்ஸிற்கு மே 31ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல் விதித்தது கோவை நீதிமன்றம். பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியாக யூ-டியூபர் சவுக்கு சங்கர்…
சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…