திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவை நிராகரிக்கிறோம் என்று கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் கூடுவதை பார்த்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சி மூழ்கிவிட்டார். காய்ச்சல் கண்ட முதலமைச்சர் “கிராமசபை கூட்டங்கள் நடத்த கூடாது என்று செய்திக்குறிப்பை அனுப்பியிருக்கிறார்.
ஊராட்சி மன்றங்களில் அமைக்கப்படும் “கிராம சபை” வேறு; திமுக நடத்தும் கிராம சபைக்கூட்டம் வேறு என்பது கூடவா அவருக்குத் தெரியாது..? அதிமுகவிற்கு தைரியமிருந்தால் போட்டி கூட்டம் நடத்தட்டுமே! இரு தினங்களில் கிளப்பியுள்ள எதிர்ப்பு அலை முதலமைச்சரின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது.
#BREAKING: கிராமசபை கூட்டம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை – தமிழக அரசு
கிராம சபை என்ற பெயரில்தானே கூட்டம் நடத்தக் கூடாது ? இனி மக்கள் கிராம சபை என்ற பெயரில் நடத்தப்படும். 1700 நிர்வாகிகள் 16,700 கிராமங்கள்/ வார்டுகளில் நடத்தும் மக்கள் சந்திப்பும், பிரச்சாரமும் தொடரும்; முதலமைச்சர் மட்டுமல்ல எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது என தெரிவித்துள்ளார்.
அரசு அனுமதி அளிக்கப்படாத நிலையில் கிராமசபை கூட்டம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: ஒரு புதிய ஆய்வில், X குரோமோசோம் மரபணு விந்தணுக்களின் வளர்ச்சிக்கும் ஆண்களின் கருவுறுதலுக்கும் அவசியம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட CSIR-Centre for Cellular…
சென்னை : ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு இது வரை 3 அணிகள் தேர்வாகியுள்ள நிலையில் 4-வது அணிக்காக பெங்களூரு அணியும், சென்னை அணியும் நாளைய நாளில்…
சென்னை: பாஜகவுக்கு 272 எனும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் அக்கட்சியின் பிளான் பி என்ன என்ற கேள்விக்கு அமித்ஷா பதில் அளித்துள்ளார். நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கான…
சென்னை : இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகிறது. ஐபிஎல் 2024 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17…
சென்னை: யூ-டியூபர் பெலிக்ஸிற்கு மே 31ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல் விதித்தது கோவை நீதிமன்றம். பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியாக யூ-டியூபர் சவுக்கு சங்கர்…
சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…