நம்பிக்கையில்லா தீர்மானம் – பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியது!

இம்ரான்கானுக்கு எதிரான அவரது கட்சி எம்பிக்கள் 30 பேரும் நாடாளுமன்றத்துக்கு வந்திருப்பதாக தகவல்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்புக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் கூடியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைக்கு வந்த நிலையில், பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவரது ஆதரவு எம்பிக்கள் வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இம்ரான்கானுக்கு எதிரான அவரது கட்சி எம்பிக்கள் 30 பேரும் அவைக்கு வந்திருப்பதாக தகவல் கூறப்படுகிறது.

இதனிடையே, பாக். நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு அடுத்த வாரத்திற்கு தள்ளி போகலாம் என்றும் இன்று வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில் பாக். சட்டத்துறை அமைச்சர் ஃபவத் சவுத்ரி தகவல் தெரிவித்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில்,  இம்ரான்கான் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் யாரும் நாடாளுமன்றம் வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.