இ-சிம் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய வாட்ச்..!

 

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் முதல்முறையாக செல்லுலார்/LTE வெர்சன் ஆப்பிள் வாட்ச் தொடர் 3-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது .

இதற்கு முன்பாகவே, இந்த ஆப்பிள் வாட்ச்க்கு சேவை வழங்கும் அளவிற்கு யுனிபைட் லைசென்ஸ் கூறியபடி உட்கட்டமைப்பு வசதிகள் ஏர்டெல்லிடம் இல்லை என DoT யிடம் புகார் அளித்துள்ளது ஜியோ

இ-சிம் தொழில்நுட்பம் என்றால் என்ன?

ஆப்பிள் நிறுவனத்தால் உலகம் முழுக்க அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய தொழில்நுட்பம், இந்தியாவில் அதன் முந்தைய ஆப்பிள் வாட்ச் வெர்சன்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகவும்,இனி போனில் இருந்து சுதந்திரமாக தனித்து செயல்படக் கூடியதாகவும் இருக்கும். ஆப்பிள் வாட்ச் உங்கள் போன் எண்ணின் நீட்சியாக நெட்வொர்க் உடன் இணைய முடியும். ஒருமுறை நெட்வொர்க் உடன் இணைத்துவிட்டாலே, இந்த வாட்ச் தனித்து அழைப்புகளை மேற்கொள்ளவும், பாடல்களை இசைக்க, ஓலா மற்றும் உபரை அழைக்க இணையத்தை பயன்படுத்தவும் ஆரம்பித்துவிடும்.

ஆனால் இவற்றையெல்லாம் செய்ய ஐபோனுடன் இணைக்க வேண்டிய அவசியமில்லை. ஆப்பிள் வாட்ச்சில் பயன்படுத்தும் இந்த புதிய தொழில்நுட்பம், இ-சிம்மை அடிப்படையாக கொண்டது. ஸ்மார்ட்போன் அல்லது மொபைல் போனில் பயன்படுத்தும் சாதாரண சிம் போல இல்லாமல், இந்த இ-சிம்மை பயனர்கள் மாற்றவே , பறிமாற்றிக்கொள்ளவோ முடியாது. வாட்ச்சிலேயே உள்ள ஆண்ட்டனா மூலம் யுனிவர்செல் மொபைல் டெலிகம்யூனிகேசன் சிஸ்டம் ரேடியோவை பயன்படுத்தி நெட்வொர்க்கில் இணைய முடியும். இன்டர்நேசனல் மொபைல் சப்ஸ்கிரைபர் ஐடென்டிடி (IMSI) எண்ணை சேமித்து கொள்வதன் மூலம் அழைப்புகளை இணைக்கவும், ஐபோன் பயனர் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தால் வாட்ச்சுக்கு அழைப்பை திருப்பவும் முடியும்

இந்த சேவைக்கு இந்தியாவில் கூடுதல் கட்டணம் இல்லை இந்திய பயனர்களுக்கு ஆப்பிள் வாட்ச் மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை என்னவென்றால், இந்த சேவைக்கு தனியே கட்டணம் இல்லை. அமெரிக்கா மற்றும் பிற நாடுகளை போல தொலைதொடர்பு நிறுவனங்கள் ஆப்பிள் வாட்ச் சேவைக்கு தனி கட்டணம் வசூலிக்காமல், ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் ஏற்கனவே உள்ள திட்டத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் இந்த சேவையை வழங்குகின்றன.

ஆப்பிள் வாட்ச்கள் புவியியல் அமைப்பை பொறுத்தது என்பதால், அமெரிக்காவில் வாங்கும் வாட்சுகள் இந்தியாவில் இயங்காது என்பதை நினைவிற் கொள்ளவும். இந்த இ-சிம் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது இது முதல்முறையல்ல. ஏற்கனவே சாம்சங் நிறுவனம் தனது கியர் S2 3G யில் பயன்படுத்தியுள்ளது. ஆப்பிள் ஐபாட் பாரோ மாடல்களில் சாதாரண சிம்மிற்கு பதில் ஆப்பிள் சிம் மூலம் லோக்கல் நெட்வொர்க் பயன்படுத்தப்பட்டது.

Recent Posts

‘இது தோனிக்கு கடைசி சீசனா இருக்கும்னு எனக்கு தோணல ..’ ! – ராபின் உத்தப்பா

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…

13 mins ago

இனி வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்.!

சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…

16 mins ago

அடுத்த 3 நேரத்தில் 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…

17 mins ago

குற்றாலத்தில் வெள்ளம்..அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய மக்கள்!!

சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில…

45 mins ago

இந்த 11 மாவட்டத்துக்கு கனமழை…3 மாவட்டத்துக்கு மிக கனமழை..வானிலை மையம் அலர்ட்!

சென்னை : இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்,…

1 hour ago

வைகாசி விசாகம் 2024 இல் எப்போது?

வைகாசி விசாகம் 2024 -இந்த ஆண்டிற்கான வைகாசி விசாகம் எப்போது என்றும்  தேதி, நேரம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி இப்ப பதிவில் காணலாம். வைகாசி விசாகம்…

1 hour ago