அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே எனது விருப்பம்.! – தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி.!

அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பம்.  – தமிழிசை சௌந்தரராஜன்.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாளை அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா என பலரும் எம்ஜிஆருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதே போல, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும், சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை கூறுகையில், என் திருமணத்தை நடத்தி வைத்தவர் என்ற நன்றி உணர்வோடு எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்தினேன். நல்லநோக்கத்திற்காக எம்.ஜி.ஆர் அதிமுக கட்சியை உருவாக்கினார். என குறிப்பிட்டார்.

மேலும் குறிப்பிடுகையில், அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பம்.  எனவும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறினார்.

Leave a Comment